கோத்ரேஜ் நிறுவனத்தின் லாபம் ரூ.726.72 கோடி-*தொடர்ந்து 4வது ஆண்டாக முட்டை ஏற்றுமதி சரிவு-* இன்றைய வணிகம்-நாளிதழ்: கே.வி.பி அதன் கிளைகளை விரிவாக்கம் செய்கிறது

Saturday 28 April 2012

கே.வி.பி அதன் கிளைகளை விரிவாக்கம் செய்கிறது


தமிழ்நாட்டின் முன்னணி தனியார் வங்கியான கரூர் வைஸ்யா வங்கி (கே.வி.பி) நாடு முழுவதும் அதன் கிளைகளை விரிவாக்கம் செய்ய  முடிவு செய்துள்ளது என்று அந்த வங்கியின் மேலாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் இதைப்பற்றி கே.வி.பியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கே வெங்கட்ராமன் அவர்கள் கூறுகையில், இந்த நிதி ஆண்டில் வங்கியின் கிளைகளை 450 என்ற அளவில் உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் அதற்காக வடக்கு, மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வெகு விரைவில் அதன் கிளைகளை திறக்க இருப்பதாகவும் அவர் கூறினார். மேலும் கே.வி.பி ஏற்கனவே 2011-12 ஆம் ஆண்டில் பாட்னா மற்றும் பீகார் உட்பட 72  இடங்களில் கிளைகளை திறந்து உள்ளது என்றும் அடுத்த நிதி ஆண்டிற்குள் மேலும் 100 கிளைகளை சேர்க்க இலக்கு வைத்திருப்பதாக அவர் கூறினார்.

No comments:

Post a Comment