கோத்ரேஜ் நிறுவனத்தின் லாபம் ரூ.726.72 கோடி-*தொடர்ந்து 4வது ஆண்டாக முட்டை ஏற்றுமதி சரிவு-* இன்றைய வணிகம்-நாளிதழ்: May 2012

Thursday 31 May 2012

செய்திகள்


கும்மிடிபூண்டியில் ஆலைத் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கும்மிடிபூண்டி: கும்மிடிபூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள, எஸ்.ஏ.சி ஆலைத் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இயந்திரங்களின் உதிரிபாகங்கள் தயாரிக்கும் ஆலையான எஸ்.ஏ.சி நிறுவனத்தில் பணிநேரத்தை 12 மணி நேரத்திலிருந்து, 8 மணி நேரமாக குறைக்க வலியுறுத்தியும், 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிபவர்களைபணிநிரந்தரம் செய்யக் கோரியும் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
..........

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு : பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி

திருப்பூர்: டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிந்து வருவது, திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தியா ரூபாய் மதிப்பு கடும் சரிவை சந்தித்து வருகிறது. ஒரு டாலருக்கு இந்திய ரூபாய் மதிப்பு `47 ஆக இருந்தது. கடந்த வாரம் இது வரை இல்லாத அளவு `56ஐ தொட்டது. இதனால் இறக்குமதியாளர்கள் கவலையடைந்துள்ளனர். அதேசமயம், இது ஏற்றுமதியாளர்களுக்கு நன்மை அளிப்பதாக உள்ளது. குறிப்பாக திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி துறையினருக்கு இது மகிழ்ச்சியை அளித்துள்ளது.

திருப்பூரில் இருந்து 90 சதவீத பின்னலாடைகள், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. டாலர் மதிப்பின் அடிப்படையில் தான் ஏற்றுமதி ஆர்டர்களை பையர்கள் வழங்கி வருகின்றனர். ஏற்கனவே பெறப்பட்ட ஆர்டர்கள் பழைய டாலர் மதிப்பில் பெறப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்திய ரூபாய்க்கு எதிரான டாலர் மதிப்பு உயர்ந்து வருவது ஏற்றுமதியாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாய ஆலை மூடல், மின்தடை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால், சரிவில் இருந்த பின்னலாடை ஏற்றுமதி வளர்ச்சிப் பாதைக்கு திரும்ப வாய்ப்பு உள்ளதாக ஏற்றுமதியாளர்கள் நம்புகின்றனர்.
....................

22 நாளாக பைலட்டுகள் ஸ்டிரைக்ஏர் இந்தியா நஷ்டம் ரூ.310 கோடியானது


மும்பை 30: ஏர் இந்தியா நிறுவனத்தின் பைலட்டுகள் ஸ்டிரைக் 22வது நாளாக நீடித்தது. இதனால், அந்த நிறுவனத்துக்கு ரூ.310 கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு விமானங்களை இயக்கும் ஏர் இந்தியா பைலட்டுகள் கடந்த 8ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், வெளிநாடுகளுக்கான ஏர்இந்தியா விமான சேவை கடுமையாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பைலட்டுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், பிரச்னைக்கு தீர்வு ஏற்படவில்லை.

இந்த நிலையில், 22வது நாளாக நேற்றும் பைலட்டுகள் ஸ்டிரைக் நடந்தது. தொடர்ந்து நடக்கும் ஸ்டிரைக் காரணமாக ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.310 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் மும்பையில்  தெரிவித்தார்.
................

மிகச் சிறிய வீடியோஸ்கோப்பை அறிமுகப்படுத்தும் ஒலிம்பஸ் நிறுவனம்


மின்னணு பொருட்களின் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ஒலிம்பஸ் உலகில் காணப்படும் வீடியோஸ்கோப்களில் மிகவும் சிறிதான வீடியோஸ்கோப்பைத் தயாரித்துள்ளது. வீறிலிணிஙீ ஜிஙீ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வீடியேஸ்கோப் வெறும் 2.4 மில்லிமீட்டர்கள் விட்டம் கொண்டதாக அமைக்கப் பட்டுள்ளதுடன், இதே அளவில் பைர்ஸ்கோப் எனும் சாதனம் மட்டுமே உள்ளதாக ஒலிம்பஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மிக விரைவில் அந்நிறுவனம் இந்த வீடியோஸ்கோப்பை அறிமுகப்படுத்த இருக்கிறது.
.....................

மணல், சூரிய ஒளியை பயன்படுத்தி நவீன பிரிண்டர்கள்


கணினித் தொழில்நுட்பத்தில் பிரிண்டர்களின் பயன்பாடானது அதிகளவில் காணப்படுகின்றன. இதன் வரலாற்றில் பல்வேறு தொழில்நுட்பங்களில் அமைந்த பல்வேறு வகையான இருபரிமாணப் பிரிண்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தற்போது உள்ள தொழில்நுட்ப வளர்ச்சியின் அடிப்படையில் முப்பரிமாண பிரிண்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் முப்பரிமாணத் தோற்றம் கொண்ட வெளியீடுகளை பெற முடியும். அதிலும் மணலை மூலப்பொருளாகவும், சூரிய ஒளியை மின் முதலாகவும் கொண்ட பிரிண்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தற்போது பரிசோதனையில் இருக்கும் இந்த பிரிண்டர்கள் விரைவில் சந்தைக்கு வரவுள்ளன என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
...............

முழுமையான இணையத்தள வசதிக்கு ஏற்ற மொபைல் பிரவுசர் அறிமுகம்


பொதுவாக மொபைல் உலாவிகளில் இணையதளங்கள் முழுமையாக தெரியாது. இணைய பக்கங்களில் உள்ள வீடியோக்களை காண முடியாது. இணையதளங்களின் வசதியை முழுமையாக உபயோகிக்க முடியாது. இது போன்று சில குறைபாடுகள் மொபைல் உலாவியில் உண்டு. ஸ்கைபயர் கணினியில் இணையதளங்கள் தெரிவது போன்று ஸ்கைபயர் மொபைல் உலாவியில் இணையதளங்கள் தெளிவாக தெரிகின்றன. யூடியுப் போன்ற வீடியோ தளங்களில் வீடியோக்கள் உலாவியின் உள்ளேயே ப்ளே ஆகின்றன. மொத்தத்தில் ஓரளவுக்கு கணினியில் பிரவுசிங் செய்வது போன்ற அனுபவத்தை ஸ்கைபயர் தருகிறது. ஸ்கைபயரின் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பு 1.5 சிம்பியன் இணையங்குதளத்தை உபயோகிக்கும் மொபைல் போன்களுக்கு என்று வெளியாகி உள்ளது. இது தொடுதிரை மொபைல்களையும் ஆதரிப்பது சிறப்பம்சம்.

தமிழர்களாகிய நமக்கு ஸ்கைபெயரில் சிறப்பம்சம் என்னவெனில் தமிழ் இணையதளங்கள் தெளிவாக தெரிகின்றன. பொதுவாக ஒபேரா மினி தவிர மற்ற மொபைல் உலாவிகளில் தமிழ் இணைய தளங்களை பார்க்க முடியாது. ஒபேரா மினி இணைய உலாவியில் தமிழ் தளங்களை காண சிறிய மாற்றம் செய்ய வேண்டும். ஆனால் ஸ்கைபயர் இணைய உலாவியில் எந்த மாற்றமும் செய்ய தேவை இல்லை. நீங்கள் மொபைல் போனில் இணையம் உபயோகிப்பவராக இருந்தால் நீங்கள் கண்டிப்பாக சோதித்து பார்க்க வேண்டிய இணைய உலாவி ஸ்கைபயர். இது நிச்சம் உங்களை கவரும். ஸ்கைபயரின் இணையதளம். உங்கள் கணினியில் தரவிறக்க இந்த சுட்டிக்கு செல்லுங்கள். தரவிறக்கிய பின் உங்கள் மொபைலுக்கு மாற்றி நிறுவி கொள்ளுங்கள். நேரடியான உங்கள் மொபைலில் இருந்து ஸ்கைபயரை தரவிறக்க உங்கள் மொபைலில் இருந்து m.skyfire.com இந்த முகவரியை அணுகுங்கள். உங்கள் மொபைலுக்கு ஏற்ற பதிப்பு தரவிறக்கப்பட்டு நிறுவப்படும்.
...............

குழந்தைகளுக்கான டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் அறிமுகம்

சிறிய குழந்தைகள் முதல் படிக்கும் மாணவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் அறிமுகமாகி உள்ளது. முற்றிலும் வண்ணமயமாக்கப்பட்ட குழந்தைகள் விளையாடும் பிளே ஸ்டேசன் போல் இது அமைந்துள்ளது. இந்த டெஸ்க்டாப் கம்யூட்டருக்கு பிரிமியர் கிட்ஸ் சைபர்நெட் ஸ்டேசன் என்று பெயர் வைத்துள்ளனர். தண்ணீர் கீபோர்டில் பட்டால் கூட எந்த பழுதும் ஏற்படாது என்பதில் இருந்து மானிட்டரை தொட்டு இன்புட் கொடுக்கலாம் என்பதுவரை அனைத்தும் கொஞ்சம் வித்தியாசமாகத் தான் உள்ளது.

இண்டெர்நெட்டில் ஆபாச இணையதளங்களை தடுக்கும் மென்பொருளும் எந்த வைரஸும் கம்யூட்டரை தாக்காத வண்ணம் உள்ள மென்பொருள்களையும் வடிவமைத்துள்ளனர். இதனுடன் குழந்தைகள் அறிவை வளர்த்துக் கொள்ள மூன்று முக்கியமான பேக்கேஸும் சேர்த்தே கொடுக்கின்றனர் இதில் 2 வயது முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகள் பயன்படுத்த டொட்லர் என்று முதல் பேக்கேஸ். இரண்டாவது 5 முதல் 11 வயது வரை உள்ள குழந்தைகள் பயன்படுத்த கைண்டர்கெர்டன் என்ற பேக்கேஸ். மூன்றாவதாக 11 முதல் 15  வயது வரை உள்ள தொடக்க மற்றும் மேல்நிலை மாணவர்களுக்கான  பேக்கேஸும் உள்ளது. இத்தனை வசதிகளும் உள்ள இந்த டெஸ்க்டாப் கம்ப்யூட்டரின் விலை கொஞ்சம் அதிகம் தான் இதன் விலை 1999 அமெரிக்க டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
..............

வீடியோ கேம் பிரியர்களுக்கான புதிய டேப்லட் அறிமுகம்


வீடியோ கேம்களுக்கான பொருட்களை தயாரிக்கும் ரேசர் நிறுவனமானது வீடியோ கேம் பிரியர்களை நோக்கமாகக் கொண்டு பியோனா எனப்படும் புதிய டேப்லட்டுகளை உருவாக்கியுள்ளது. டேப்லெட்டின் இரண்டு பக்கவாட்டிலும் இயக்குபிடிகள் காணப்படுவதுடன் தேவைக்கேற்றவாறு டச்ஸ்கிரீன் வசதியையும் பயன்படுத்த முடியும்.

அத்துடன் வின்டோஸ் 8 இயங்கு தளத்தையும் பயன்படுத்தக்கூடியதாக இருக்குமாம். இதில் இண்டர் கோர்ஸ் ஐ7 ப்ராசசர்ஸ் இணைக்கப்பட்டிருப்பதனால் மிகவேகமாக இயங்குவதுடன் ஆங்கிரி பேர்ட்ஸ் போன்ற உயர் தரமுடைய கணினி விளையாட்டுக்களையும் பயன்படுத்த முடியும். இவற்றை 2012ல் நான்காவது காலாண்டுப்பகுதியில் நடக்க இருக்கும் நுகர்வோர் எலக்ட்ரானிக்கல் கண்காட்சியில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கின்றது. இதன் விலை 1000 அமெரிக்க டாலர்களிலும் குறைவாகவே காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
..................

ஃபியட் அறிமுகப்படுத்தும் புத்தம் புதிய செடான் கார்


சீன மார்க்கெட்டுக்காக புத்தம் புதிய செடான் காரை ஃபியட் தயாரித்துள்ளது. வியாஜியோ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கார் தற்போது பெய்ஜிங்கில் நடந்து வரும் சர்வதேச ஆட்டோ ஷோவில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஜிஏசி ஆட்டோமோட்டிவ் நிறுவனத்துடன் இணைந்து இந்த காரை ஃபியட் வடிவமைத்துள்ளது. டி- செக்மென்ட்டில் நிலை நிறுத்தப்பட இருக்கும் இந்த காரின் வடிவமைப்பு நிச்சயம் சீனர்களை அசத்தும் வகையில் இருக்கிறது. 1.4 லிட்டர் டி-ஜெட் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சினுடன் மார்க்கெட்டுக்கு வர இருக்கிறது.

ஆனால், 2 விதமான ஆற்றல் வேறுபாடுகளை கொண்ட 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட மாடல்களாக விற்பனைக்கு கிடைக்கும். இந்த காரின் முக்கிய அம்சங்களாக இதன் டச் ஸ்கிரீனை கூறலாம். இந்த காரில் செயற்கைகோள் இணைப்புடன் கூடிய அகன்ற 8.4 இஞ்ச் டச் ஸ்கிரீனை ஃபியட் பொருத்தியுள்ளது. இதேபோன்று, டேஷ்போர்டு வடிவமைப்பும் மிகவும் அசத்தலாக இருக்கிறது. இந்த கார் இந்தியா வருவதற்கான வாய்ப்பும் இருக்கிறது. ஏனெனில், இந்தியாவில் டி-செக்மென்ட்டில் எந்த கார் மாடலையும் ஃபியட் வைத்திருக்கவில்லை. ஆனால், இதுகுறித்து இதுவரை ஃபியட் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.
....................

ஸ்லைடர் மாடலில் புதிய எல்ஜி மொபைல்

ஸ்லைடர் வடிவமைப்பில் சி-221 என்ற புதிய மொபைலை உருவாக்கி உள்ளது எல்ஜி நிறுவனம். மிருதுவான நியூமரிக்கல் கீப்பேட் வசதியினை கொண்ட இந்த மொபைல் பட்ஜெட் விலை கொண்டது. எல்சிடி தொழில் நுட்பம் கொண்ட இந்த மொபைல் எம்பி-3 மியூசிக் ப்ளேயர் வசதிக்கும் சப்போர்ட் செய்யும். 3 மணி நேரம் வரை டாக் டைம் மற்றும் 300 மணி நேரம் ஸ்டான்-பை டைமினையும் வழங்கும் இந்த மொபைல், சிறந்த தொழில் நுட்பத்தினை எளிமையான வகையில் வழங்கும். மேலும், தகவல்கள் பரிமாற்றத்திற்கு இந்த மொபைலில் புளூடூத் வசதியும் உள்ளது. கவர்ச்சிகரமாக வடிவமைப்பை பெற்று இருக்கும் இந்த சி-221 மொபைல் கவர்ச்சிகரமான விலையையும் வழங்கும். கண் கவரும் கறுப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்ட இந்த மொபைலின் விலை இன்னும் சரிவர வெளியாகவில்லை. ஆனால் பட்ஜெட் விலையில் வெளியாக இருக்கும் இந்த மொபைலின் தொழில் நுட்ப விவரங்களை கூடிய விரைவில் பெற முடியும்.
..................

அசத்தல் விலையில் அறிமுகமான எர்டிகா மாருதி


ரூ.5.89 லட்சம் என்ற  ஆரம்ப விலையில் 7 பேர் பயணம் செய்யும் வசதிகொண்ட எர்டிகாவை மாருதி விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. மும்பையில் நடந்த விழாவில் மாருதி தலைவர் சின்சோ நகனிஷி எர்டிகாவை முறைப்படி அறிமுகம் செய்து வைத்தார். இந்திய வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் காராகஎர்டிகா இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

மேலும், ரிட்ஸ் காரின் பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்டுள்ள எர்டிகா மூலம் எம்பிவி கார் செக்மென்ட்டில் மாருதி அடியெடுத்து வைத்துள்ளது. டேஷ்போர்டு மற்றும் உள்ளலங்காரம் அனைத்தும் ஸ்விப்ட் காரிலிருந்து பெற்றுள்ளது எர்டிகா. ஆனாலும், பிரிமியம் லுக்குடன் இருக்கிறது. பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் வந்துள்ள எர்டிகா தலா 3 வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கும். 1372 சிசி கொண்ட 1.4 லிட்டர் கே-14 எஞ்சின் 95 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். எஸ்எக்ஸ்-4 காரில் பொருத்தப்பட்டிருக்கும் அதே 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின் கொண்ட மாடலில் எர்டிகா கிடைக்கும்.
........................

சக்கர நாற்காலியை ஈடுசெய்யும் புதிய சாதனம் கண்டுபிடிப்பு


சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்தும் அளவிற்கு உடல் ஊனமுற்றவர்களுக்கென்று டெக் ரொபாட்டிக் மொபலைசேஷன் டிவைஸ் என்ற புதிய வகை சாதனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சக்கர நாற்காலிகளில் உட்கார்ந்த நிலையில் தான் பயனம் செய்ய முடியும். ஆனால், இந்த அரிய வகை சாதனத்தில் சக்கர நாற்காலியைப் போன்று அமர்ந்த நிலையில் இல்லாமல் நின்று பயணிக்கக்கூடிய வசதியைத் தருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த சிறப்பு சாதனம் ஊனமுற்றவர்களுக்கு உடல் அளவில் வசதியாக இருப்பது போன்று மனதளவிலும் மகிழ்ச்சி அளிக்கும் என்று நம்பப்படுகிறது.
..................

மூக்கு கண்ணாடியில் வீடியோ கேமரா


முற்காலங்களில் கண்பார்வையில் குறைபாடு உடையர்கள்  தான் கண்ணாடி அதை ஈடு செய்வதற்காக மூக்குக்கண்ணாடிகளை அணிந்தார்கள். காலப்போக்கில் நாகரிகம் என்று கூறிக்கொண்டு அழகுக்காகவும் அணிந்தார்கள். ஆனால் தொழில்நுட்பவியலாளர்கள் ஒருபடி மேலே சென்று இந்த மூக்குக்கண்ணாடிகளையும் மின் சாதனமாக மாற்றிவிட்டார்கள். இதன் அடிப்படையில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கண்ணாடியை அணிந்தவாறு பார்க்கும் காட்சிகள், பொருட்கள் என்பனவற்றை அதில் பொருத்தப்பட்டுள்ள உயர் திறன்கொண்ட வீடியோ கேமரா மூலம் 1080 பிக்சல்களில் பதிவு செய்ய முடியும்.

மேலும், அதில் பொருத்தப்பட்டுள்ள 8 மெகாபிக்ஸல் கொண்ட கேமரா மூலம் புகைப்படங்களை எடுக்கக்கூடியதாக காணப்படுவதுடன் 44.1 kHz அதிர்வெண்ணுடன் இயங்கக்கூடிய மைக்ரோபோனும் காணப்படுகின்றது. இன்மூலம் 720 பிக்சல் அல்லது 1080 பிக்சலில் பதிவு செய்யப்படும் வீடியோவானது செக்கன்டுக்கு 30 பிரேம்கள் என்ற வேகத்தில் பதிவாகுவதுடன் 720 பிக்சலில் பதிவு செய்யும் போது செக்கன்டுக்கு 60 பிரேம்கள் என்று மாற்றக்கூடிய வசதியும் காணப்படுகின்றது.
................

பொறியியல் கல்லூரியில் 260 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை

வேளச்சேரி: பள்ளிக்கரணையில் உள்ள ஜெருசலேம் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு மாணவர்களுக்கு சிடிஎஸ், எச்சிஎல் உட்பட 35 நிறுவனங்கள் சார்பில், வேலைவாய்ப்புக்கான நேர்காணல் நடந்தது.
இதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. கல்லூரி முதல்வர் சுரேஷ் தலைமை தாங்கினார். கல்லூரி பணி நியமன அதிகாரி நிவாஸ் குமார் வரவேற்றார். எச்சிஎல் அதிகாரிகள் வம்சி கிருஷ்ணா, விக்னேஷ் ஆகியோர், 260 மாணவ, மாணவிகளுக்கு பணிநியமன ஆணையை வழங்கினர். நிர்வாக அதிகாரி காங்கேயன், துறைத்தலைவர்கள் பங்கேற்றனர்.
............................

கடையை உடைத்து மொபைல் போன் கொள்ளை கரையான்சாவடியில் அடிக்கடி திருட்டு

பூந்தமல்லி:கரையான்சாவடி பஸ் ஸ்டாப் அருகே கடை பூட்டை உடைத்து செல்போன்கள், பணத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்துச் சென்றனர். இந்த பகுதியில் திருட்டு சகஜமாகி வருகிறது. ஆனால் புகார் பதிவு செய்ய போலீசார் சுணக்கம் காட்டி வருகின்றனர்.
பூந்தமல்லி, கரையான்சாவடியைச் சேர்ந்தவர் மனோஜ் (32). கரையான்சாவடி பஸ்ஸ்டாப் அருகே செல்போன் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்து கடையை பூட்டிச் சென்றார்.
நேற்று காலை கடையை திறக்க வந்தார். கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. கடையை திறந்து உள்ளே சென்று பார்த்தபோதுரூ 80 ஆயிரம் மதிப்புள்ள செல்போன்கள் மற்றும் ரூ 30 ஆயிரம் ரொக்க பணம் கொள்ளைபோயிருந்தது.
புகாரின்படி பூந்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து, செல்போன் கடை யில் கொள்ளையடித்து தப்பிய நபர்களை தேடுகின்றனர். செல்போன் கடையை ஒட்டியுள்ள டீக்கடை, மெடிக்கல், சுவீட் கடை யில் கடந்த 3 நாளுக்கு முன் பூட்டு உடைத்து ரூ 40 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்தது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து நடக்கும் கொள்ளை சம்பவத்தால் வியாபாரிகள் பீதியில் உள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், பூந்தமல்லி, கரையான் சாவடி ஆகிய பகுதிகளில் அடிக்கடி கொள்ளை சம்பவங்கள் நடக்கின்றன. போலீசார் பெரும்பாலான புகார்கள் மீது வழக்கு பதிவு செய்வதை தவிர்த்து வருகின்றனர். அதனால்தான் இப்பகுதியில் கொள்ளையர்கள் நடமாட்டம் அதிகரித்துவருகிறது.
போலீசார் வழக்கு பதிவு செய்வதை தவிர்ப்பதைப் பார்த்தால் அவர்கள் மீதே சந்தேகம் ஏற்படு கிறது. பதிவு செய்யப்பட்ட ஒரு சில வழக்குகளில் கூட குற்றவாளி களை இன்னும் கைது செய்யவில்லைஎன்கின்றனர்.
....................

இன்றைய வணிகம் நாளிதழை விரும்பி படிக்கும் சென்னை மாநகர தந்தை சைதை துரைசாமி அவர்களுடன் நமது ஆசிரியர்



சென்னை மெரினா கடற்கரையில் புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னை மாநகராட்சி சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில் மாநகர தந்தை சைதை துரைசாமி அவர்களுடன் நமது ஆசிரியர்


Wednesday 30 May 2012

31-05-2012 issue





ஏற்காடு கோடை விழா ஒளிப்படங்கள்





















30-05-2012 News


ஜவுளித் துறை வங்கிக் கடன் மறு சீரமைப்பு

ஜவுளித் துறைக்கு உதவும் வகையில் வங்கிக் கடன்களை மறு சீரமைப்பு செய்யும் கோரிக்கையுடன் மத்திய ஜவுளி மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் ஆனந்த் சர்மா செவ்வாய்க்கிழமை மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்துப் பேசினார்.
சந்திப்புக்குப் பிறகு ஆனந்த் சர்மா செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
ஜவுளித் துறையினரின் வங்கிக் கடன்களை மறுசீரமைப்பு செய்யும் விஷயமாக நான் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்துப் பேசினேன்.
இது சம்பந்தமாகப் புதிய ஆய்வு ஒன்றை நடத்த ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது. அந்த ஆய்வு முடிந்துவிட்டது. இதன் தொடர்ச்சியாக கடன்களை மறுசீரமைப்பு செய்ய வங்கிகள் தங்களுடைய கலந்தாலோசனைகளைத் தொடங்கும் என்றார்.
நிதியமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகக் கூறினாரா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, விரைவில் இந்த விஷயத்தில் முடிவு எடுக்கப்படும் என்று பிரணாப் கூறினார். நான் எடுத்துச் சென்ற பிரச்னையில் இத்துறையினருக்கு சாதகமாகவும் ஆதரவாகவும் பேசினார் என்று ஆனந்த் சர்மா கூறினார்.
ரூ.1 லட்சம் கோடி கடன்... ஏறத்தாழ ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவில் உள்ள ஜவுளித் துறையினரின் வங்கிக் கடன்களைக் குறித்து விரைவில் முடிவு எடுக்க வேண்டும் என்று அந்தத் துறையைச் சேர்ந்த அமைப்பினர் பல்வேறு அமைச்சகங்களிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பருத்தித் தேவை குறைந்ததால், அதன் விலை கடுமையான வீழ்ச்சியைக் கண்டிருக்கிறது. இதனால் வங்கிகளிடமிருந்து ஜவுளி நிறுவனங்கள் பெற்றுள்ள கடனைத் திருப்பிச் செலுத்துவதிலும் தங்களது முதலீடுகளை நிர்வகிப்பதிலும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றன. இதைத் தொடர்ந்து கடன்களை மறுசீரமைப்பு செய்ய கோரிக்கை எழுந்தது.
ஜவுளித் துறையினரின் கோரிக்கைகளைப் பரிசீலனை செய்ய பாங்க் ஆஃப் பரோடாவின் தலைவர் எம்.டி.மல்லையா தலைமையில் ஒரு குழுவை மத்திய நிதி அமைச்சகம் அமைத்தது.
வங்கிக் கடன்கள் மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும் என்று பிரதானமாகக் கூறியது இந்தக் குழு. கடன்கள் குறித்தும் மூலதனம் குறித்தும் ரிசர்வ் வங்கி வகுத்திருக்கும் விதிமுறைகளைத் தளர்த்துவதன் மூலம் கடன் சுமையிலிருந்து சற்று ஆசுவாசம் தரலாம் என்பது அந்தக் குழுவின் பரிந்துரையாக இருந்தது.
ரிசர்வ் வங்கி மீண்டும் ஒரு ஆய்வு நடத்த வேண்டும் என முடிவு செய்தது. இந்த நிலையில் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் தலைவர் ஏ.சக்திவேல் கடன் மறுசீரமைப்பு குறித்துப் பல்வேறு தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
மிக அதிக அளவில் இருக்கும் வட்டி விகிதங்களும் மூலதனம் இல்லாமையும் சிறிய மற்றும் பெரிய ஜவுளி நிறுவனங்களின் செயல்பாடுகளை மிகவும் பாதித்திருக்கிறது என்று அவர் கூறினார்.
இந்தியத் தொழிலகங்களின் சம்மேளனத்தின் (சி.ஐ.ஐ.) அறிக்கையின்படி, சர்வதேச பொருளாதாரத் தேக்கத்தினால் ஜவுளி நிறுவனங்கள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன.
பருத்தி விலை வீழ்ச்சியும் இந்தத் துறையை மிகவும் பாதித்துள்ளது என்று சி.ஐ.ஐ.யின் அறிக்கை தெரிவிக்கிறது.
..................

பன்னாட்டு வங்கித் தலைவராக இந்தியர் நியமனம்


ஜெர்மன் தலைநகர் பெர்லினை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் பன்னாட்டு வங்கியான டாய்ஷ் வங்கிக்கு இந்தியர் ஒருவர் இணை தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
டாய்ஷ் வங்கியில் 1995-ல் பணிக்குச் சேர்ந்த அன்ஷு ஜெயின் (49) இந்தியாவில் பிறந்து வளர்ந்தவர். தில்லி பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர். அமெரிக்காவில் நிதித்துறையில் எம்.பி.ஏ. பட்டம் பெற்றார்.
2009-ம் ஆண்டு முதல் டாய்ஷ் வங்கியின் நிர்வாகக் குழுவில் இடம்பெற்று வருகிறார் ஜெயின். தற்போது, வங்கியின் நிறுவன முதலீடுப் பிரிவின் தலைவராக லண்டனில் பணிபுரிந்து வருகிறார்.
இவருடன் மற்றொரு இணை தலைமைச் செயல் அதிகாரியாக ஜோர்கன் ஃபிட்ஷென் பதவி வகிப்பார்.
வரும் வியாழக்கிழமை நடக்கவிருக்கும் வங்கியின் பங்குதாரர் கூட்டத்தில் இருவரும் அதிகாரபூர்வமாகப் பொறுப்பேற்பார்கள் என்று வங்கியின் செய்திக் குறிப்பு தெரிவித்திருக்கிறது.
................

5வது முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்றார் விஸ்வநாதன் ஆனந்த்


நடப்பு செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், இஸ்ரேல் கிராண்ட்மாஸ்டர் போரிஸ் கெல்ஃபாண்டை தோற்கடித்து 5வது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வென்றார்.
இன்று மாஸ்கோவில் நடைபெற்ற இறுதிக் கட்ட காய் நகர்த்தலில், டை பிரேக்கரில் அவர் வென்றார்.
..................

மாட்டு வண்டி வாங்க கடன் கேட்டு வங்கியில் விண்ணப்பம்

 சேலம் மாவட்டத்தில் பெட்ரோல் போட்டுக் கட்டுப்படியாகவில்லை என்று கூறி மாட்டு வண்டி, குதிரை வண்டி மற்றும் அதனை பராமரிக்க ஆகும் செலவு ஆகியவற்றைக் குறிபிட்டு கனரா வங்கிக் கிளையில் இன்று 10 இளைஞர்கள் கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.
பெட்ரோல் விலை கடுமையாக உயர்ந்ததைத் தொடர்ந்து நாங்கள் இனி மாட்டு வண்டி அல்லது குதிரை வண்டிகளையே பயன்படுத்தப் போவதாகவும், எனவே அவற்றை வாங்க கடன் அளிக்குமாறும் அவர்கள் கூறியுள்ளனர்.

INDRAIYA VANIGAM Daily News Paper TARIFF


Tuesday 29 May 2012

30-05-2012 issue





29-05-2012 issue





29-05-2012 current business news


என்எல்சி தொழிலாளர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை

 ஊதிய உயர்வு தொடர்பாக என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்களுடன் 12-வது சுற்று பேச்சுவார்த்தை இன்று புதுவையில் நடைபெற்று வருகிறது. ஊதிய உயர்வு மற்றும் பணிநிரந்தரம் கோரி என்எல்சி தொழிலாளர்கள் இன்று 39-வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுவரை அவர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்ததையடுத்து இன்று மீண்டும் மத்திய தொழிலாளர் நலத்துறை ஆணையர் சிவராஜ் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
.....................

பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து கோவையில் 10 ஆயிரம் ஆட்டோக்கள் வேலைநிறுத்தம்

கோவை, மே.29: பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து கோவையில் 10 ஆயிரம் ஆட்டோக்கள் இன்று இயக்கப்படவில்லை.
பெட்ரோல் விலை எப்போதும் இல்லாத அளவுக்கு லிட்டருக்கு ரூ 7.50 உயர்த்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் கோவையில் இன்று 10 ஆயிரம் ஆட்டோக்கள் பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து இயக்கப்படவில்லை.
.................

பெட்ரோல் விலை உயர்வு: நாளை மறுநாள் கடையடைப்பு நடத்த அழைப்பு

 பெட்ரோல் விலை உயர்வை மத்திய அரசு மறுபரிசீலனை செய்யக் கோரி 31-ம் தேதி கடையடைப்பு போராட்டம் நடத்த தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து அந்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஏற்கனவே விலைவாசி உயர்வு, கடுமையான மின்பற்றாக்குறை என பல வகைகளில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வு மக்களின் சிரமத்தை வெகுவாக அதிகரிக்கும். எனவே தற்போது மத்திய அரசு அமல்படுத்தியுள்ள கடுமையான பெட்ரோல் விலை உயர்வினை மறுபரிசீலனை செய்து உடனடியாக அதை ரத்து செய்ய வேண்டும் என வற்புறுத்தி 31-ம் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடையடைப்பு போராட்டம் நடத்த  தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள தொழில் வணிகத் துறையினர் அனைவரும் கடையடைப்பில் முழுவமையாகப் பங்கேற்று கடுமையான பெட்ரோல் விலை உயர்வுக்கு தங்களது எதிர்ப்பினை தெரிவிக்க வேண்டும் என கேட்டுக் கொள்வதாக தமிழ்நாடு தொழில் வர்த்தகம் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
..................

எண்ணூர் அனல்மின் நிலையத்தில் மின்உற்பத்தி நிறுத்தம்


ரசாயனப் பொருள்கள் தட்டுப்பாடு காரணமாக கடல்நீரை சுத்தப்படுத்துவதில் பிரச்னை ஏற்பட்டுள்ளதால் எண்ணூர் அனல்மின் நிலையத்தின்  3 யூனிட்டுகளில் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
எண்ணூர் அனல்மின்நிலையத்தில் 5 யூனிட்டுகளில் மின்உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. 3 யூனிட்டுகளில் மொத்தம் 130 மெகாவாட் மின் உற்பத்தி ஆனது.
இந்த நிலையில் ரசாயனப் பொருள் தட்டுப்பாடு காரணமாக மின் உற்பத்தி பாய்லர்களை குளிர்விக்க முடியவில்லை. இதனால் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. எனினும் இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு எதுவும் இருக்காது என்று தெரிவிக்கப்படுகிறது.
கடல் நீரை சுத்தப்படுத்தி பயன்படுத்துவதற்கான ரசாயனத்தை உடனடியாக கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எனவே எண்ணூர் அனல்மின் நிலையம் மீண்டும் விரைவில் செயல்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
...............................

இணையதளம் மூலம் கடன்வாங்கித் தருவதாக மோசடி: 3 பேர் மீது வழக்குப்பதிவு


இணையதளம் மூலம் கடன்வாங்கித் தருவதாக மோசடி செய்த 3 பேர் மீது மதுரை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பெங்களூரைச் சேர்ந்தவர் சுஜாதா. இவரிடம் இணையதளம் மூலம் கடன்வாங்கித் தருவதாக சிவகாசியைச் சேர்ந்த கருப்பசாமி, பெரியகுளத்தைச் சேர்ந்த ராஜாராம் மற்றும் கண்ணன் ஆகியோர் கூறியுள்ளனர். ரூ 2 கோடி கடன்வாங்கித் தருவதாகவும் அதற்காக ஆவணங்களுக்காக ரூ 13 லட்சம் கமிஷன் தரவேண்டும் என்று வசூலித்துள்ளனர். ஆனால் கடன் வாங்கித் தராமலும், கொடுத்த பணத்தை திருப்பித் தராமலும் மோசடி செய்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து இதுகுறித்து மதுரை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
............

28-05-2012 issue